1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2015 (22:46 IST)

அருண் ஜெட்லியை மட்டும் பொறுப்பு என்று கூறுவது சரியல்ல: சரத்பவார் கருத்து

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் பல கோடி ரூபாய் குற்றச்சாட்டில்,  அருண் ஜெட்லியை மட்டும் பொறுப்பு என்று கூறுவது சரியல்ல என்று சரத்பவார் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது பல கோடி ரூபாய் முறைகேடு  செய்துள்ளார் எனவே, அவர் தார்மீக பொறுப்பேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி வருகிறது.
 
இந்த நிலையில், இந்த விவகாரத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கருத்து தெரிவிக்கையில், டெல்லி கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த சிலர் முறைகேடு செய்துள்ளனர். ஆனால், இதில், அனைத்திற்கும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை மட்டும் பொறுப்பு என்று கூறுவது சரியல்ல என்றார்.