வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2015 (15:39 IST)

'ஏப்ரல் 1 - அரவிந்த் கெஜ்ரிவால் தினம்': டெல்லியில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்!

முட்டாள்கள் தினமாக கருதப்படும் ஏப்ரல் 1 ஆன இன்று, ‘ஏப்ரல் 1 - அரவிந்த் கெஜ்ரிவால் தினம்’ என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. டெல்லியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 
ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினமாக கருதப்படுவதும், இந்த நாளில் ஒருவரையொருவர் விளையாட்டாக ஏமாற்றுவதும் வழக்கம்.
 
இந்நிலையில், தலைநகர் டெல்லி முழுவதும் இன்று ‘ஏப்ரல் 1 - அரவிந்த் கெஜ்ரிவால் தினம்' என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 'பகத் சிங் கிராந்தி சேனா' என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் தலையை தொங்கவிட்டபடி உள்ள பழைய படமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே, ஆம் ஆத்மி கட்சியில் தலைவர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இப்படி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.