வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Modified: செவ்வாய், 24 ஜூன் 2014 (18:45 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு அரெஸ்ட் வாரண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு ஆந்திர நிதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான 'பிசினஸ் டுடே' பத்திரிகையில், தோனியை விஷ்ணுவைப் போல சித்தரித்து முதல் பக்க படம்  வெளியிடப்பட்டது.
 
இதனை தொடர்ந்து இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடந்து கொண்டதாக தோனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. 
 
இந்த வழக்கில், மூன்று சம்மன்கள் கொடுக்கப்பட்டும் தோனி நேரில் ஆஜராகவில்லை என்பதால் அவரை  ஜூலை 16ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தோனி இங்கிலாந்தில் ஜூலை 9 ஆம் தேதி துவங்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியுடன் இங்கிலாந்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.