வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 21 மார்ச் 2016 (18:46 IST)

தேசிய கீதத்தை தவறாக பாடியதாக அமிதாப்பச்சன் மீது புகார்

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் தொடக்கத்தில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இந்திய தேசிய கீதத்தை தவறாக பாடியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 

 
கடந்த சனிக்கிழமை, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. பொதுவாக போட்டி தொடங்குவதற்கு முன் அந்த நாடுகளின் தேசிய கீதம் பாடப்படும். இந்த முறை அந்த வாய்ப்பு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு அளிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், உல்காஷ் என்பவர் டெல்லி அசோக் நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் “அமிதாப்பச்சன் பாடும் போது, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டார்” எனவும் புகார் கூறியுள்ளார்.
 
தேசியகீதத்தை 52 வினாடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால் அமிதாப்பச்சன் 1 நிமிடம் மற்றும் 52 வினாடிகள் எடுத்துக் கொண்டிருப்பதாக அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.