1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 28 மே 2015 (18:41 IST)

நாடு முழுமைக்கும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் திட்டமில்லை - அமித் ஷா

நாடு முழுமைக்கும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் திட்டமில்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
 
இதுதொடர்பாக கோவா மாநிலம், பனாஜியில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
 
நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் திட்டமில்லை. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதுகுறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும். பாஜக ஆட்சி, எந்த மாநிலத்தில் நடைபெற்றாலும் சரி, அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பதற்கு முன்பு அங்குள்ள மக்களின் உணர்வுகளை பரிசீலித்த பிறகே முடிவு செய்வோம். கோவா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில மக்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே, இந்த முடிவை கோவா அரசு எடுத்துள்ளது.
 
மாட்டிறைச்சியை சாப்பிட விரும்புபவர்கள், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தது குறித்து கேட்கிறீர்கள். அது, அவருடைய தனிப்பட்ட கருத்து. கட்சித் தலைவராக இருப்பதால், அதுகுறித்து தனிப்பட்ட முறையில் எந்த கருத்தையும் என்னால் தெரிவிக்க இயலாது என்றார் அமித் ஷா.