வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2015 (14:31 IST)

ஒரினச்சேர்க்கை கணவரால் சித்ரவதை: எய்ம்ஸ் மருத்துவமனை பெண் மருத்துவர் தற்கொலை

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை மருத்துவர், ஒரினச்சேர்க்கை கணவரால் சித்ரவதை செய்யபட்டதால் மனவேதனையடைந்து ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல்  (எய்ம்ஸ்) மருத்துவமனையை சேர்ந்த 31 வயது மருத்துவர் ஒரினச்சேர்க்கை கணவரால் சித்ரவதை செய்யபட்டு உள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் இந்த விவரம் அவரது பேஸ் முக் மூலம் தெரியவந்தது.
 
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரியா வேதி என்ற 31 வயது பெண் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவர் நேற்று டெல்லியில் உள்ள பகர்கஞ்ச் ஹோட்டலில்  கையை அறுத்து  தற்கொலை செய்து கொண்டார்.
 
பிரியா வேதி தனது பேஸ் புக்கில் 4 பக்கம் கொண்ட தற்கொலை கடிதம் ஒன்றை பதிவு செய்து இருந்தார். அதில் தனது கணவர் ஒரினச்சேர்க்கை பழக்கம் உடையவர் என்றும் அவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு மன ரீதியாக கொடுமை படுத்தியதாகவும்  கூறி உள்ளார். 
 
அந்த கடிதத்தில் தற்கொரல செய்துகொண்ட பிரியா வேதி கூறியிருப்பதாவது:-
 
எனக்கும் எனது  கணவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.  ஆனால் இதுவரை எந்த திருமண பந்தமும் ஏற்படவில்லை. நாங்கள் இதுவரை உடல் ரீதியா இணையவும் இல்லை.  அவரது லேப்டாபில் அவர் போலி இமெயில் ஐடி மூலம் பலவேறு ஓரினச்சேர்க்கை நண்பர்களுடன் தொடர்பு கொள்வார். இது தெரிந்தும் மனைவி என்ற வகையில் நான் அவருக்கு உதவி செய்து வந்தேன்.
 
ஆனால் அவர் என்னை மனவேதனை படுத்தி வந்தார். கடந்த இரவில் அவர் என்னை உணர்வு பூர்வமாக மிகவும் கொடுமை படுத்தினார் என்னை  மூச்சு விட முடியாமல் செய்தார் என்று எழுதியுள்ள பிரியா ரேவதியுள்ளார்.
 
மேலும், "நீ ஒரு மனித ஜென்மம் கிடையாது நீ ஒரு பிசாசு; என்னிடம் இருந்து எனது உயிரை எடுத்து கொண்டாய்" என்று அந்த கடிதத்தில் பிரியா வேதி கூறியுள்ளார்.
 
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது:-
 
பிரியா எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவராவார். ஞாயிற்று கிழமை காலை ஹோட்டல் அறையில் அவர் பிணமாகக் கிடந்த விவரம் தெரிய வந்த்து. கடந்த சனிக்கிழமை பிரியாவின் கணவர்  மனைவியை காணவில்லை என புகார் அளித்து உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் பிரியா வேதியின் கணவரை கைது செய்தனர். பிரியா வேதியின் கணவரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.