வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (11:01 IST)

விரைவில் சம்பவம் இருக்கு... பேரணிக்கு ரிகர்சல் பார்த்த விவசாயிகள்!!

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாய அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த இருப்பதால் இதற்கு ஒத்திகை பார்த்துள்ளனர். 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரொ விவசாயிகள் பலர் டெல்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களிடம் மத்திய அரசும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
விவசாயிகள் வேளாண் சட்டங்களை முழுவதும் திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சட்ட திருத்தங்கள் மட்டுமே செய்ய முடியும் என அரசு தரப்பில் கூறப்பட்டதால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. 
 
இதனால் குடியரசு தினத்தன்று ( ஜனவரி 26 ஆம் தேதி ) டெல்லியில் விவசாய அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதற்காக இன்று ஒத்திகை பார்த்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.