வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 26 மார்ச் 2016 (14:07 IST)

தொலைக்காட்சி நிருபர், கள்ளக்காதலியுடன் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடகா மாநிலத்தில் கள்ளக்காதலை கண்டித்ததால் தனியார் தொலைக்காட்சி நிருபர் தனது கள்ளக்காதலியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


 

 
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு டவுன் ஹாவேரி பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக பணியாற்றி வந்தார்.
 
இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் சிவ மொக்காவில் நிருபராக பணியாற்றி வந்தார்.
 
இந்நிலையில் இவருக்கும், இவருடைய அத்தை மகள் பிரியா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது கள்ளக்காதல் ஏற்பட்டது.
 
இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.
 
இதைத் தொடர்ந்து, இவர்களுடைய கள்ளக்காதல் விவகாரம் நவீனின் மனைவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்தது.


 

 
இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் அவர்கள் இருவரையும் கண்டித்ததாக தெரிகிறது. அத்துடன் அவர்கள் இருவரும் இனி சந்திக்கக் கூடாது என்று கூறினர். இதனால் மனமுடைந்த அவர்கள் கடந்த 23 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினர்.
 
இந்நிலையில், அவர்கள் சிக்கமகளூரு டவுன் ஐஜி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
 
ஆனால் அவர்கள் இருவரும், அந்த அறையை விட்டு 2 நாட்களாகியும் வெளியே வரவில்லை. அத்துடன், அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
 
இதனால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், அறையின் ஜன்னல் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது நவீனும், பிரியாவும் அறையில் ஒன்றாக தூக்கில் தொங்கிதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
 
இது குறித்து சிக்கமகளூரு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறயினர், அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூருவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த நவீனும், அவரது கள்ளக்காதலி பிரியாவும் வீட்டைவிட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
 
இதைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு வந்து தங்கியுள்ளனர். பின்னர் அந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
 
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.