வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2015 (18:11 IST)

அத்வானியை காணவில்லை: குஜராத் காந்தி நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்

குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியைக் காணவில்லை என்று வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
 
பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நாடாளுமன்ற தேர்தலில்  குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.  இந்நிலையில் அவரது சொந்த தொகுதியான காந்திநகர் தொகுதியில்  தங்கள் எம்.பி அத்வானியை காணவில்லை என  போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 
 
அந்த போஸ்ட்டரில், "கடந்த சில ஆண்டுகளாக அத்வானியை காணவில்லை தொகுதி மக்களாகிய நாங்கள் அவரிடம் தொகுதியின் பிரச்சினைகளை தெரிவிக்க விரும்புகிறோம். காந்திநகரில் அவரை யாராவது பார்த்தால் எங்களிடம் தெரிவியுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தன.
 
அந்த போஸ்டரில், ஆம் ஆத்மி என, குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், "அந்த போஸ்டருக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
 
சமீபத்தில் ராகுல் காந்தியைக் காணவில்லை என அவரது அமேதி தொகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.