வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 23 ஜூலை 2014 (13:40 IST)

பிரபல நடிகை ரம்பா மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு

நடிகை ரம்பா, அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில், ரம்பாவின் அண்ணன் சீனிவாசனின் மனைவி பல்லவி கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில் நடிகை ரம்பா, அவரது பெற்றோர் மற்றும் கணவர் சீனிவாசன் ஆகியோர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக  பல்லவி தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று  காவல் துறை துணை ஆணையர் தெரித்துள்ளார்.