வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 6 மே 2015 (14:34 IST)

சிறை கதவுகளை நோக்கி நடிகர் சல்மான் கான்

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு மும்பை நீதி மன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.


 

 
பிற்பகல் 1.20 மணிக்கு நீதிபதி தேஷ் பாண்டே தண்டனை விவரத்தை அறிவிக்க தனது அறைக்கு வந்தார். ஆனால் அப்போது மின்சார தடை ஏற்பட்டதால், தண்டனையை அறிவிப்பது தாமதம் ஏற்பட்டது.
 
பின்னர், சற்று நேரத்தில் மீண்டும் மின்சாரம் வரவே, நீதிபதி தேஷ் பாண்டே தண்டனை விவரத்தை அறிவித்தார். அதில், நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.
 
இதனையடுத்து, நடிகர் சல்மான் கான் மும்பை காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் சல்மான் கானை சிறைக்கு கொண்டு செல்ல உள்ளனர்.
 
இந்நிலையில், மும்பை உயர் நீதி மன்றத்தில் ஜாமீன் கோரி நடிகர் சல்மான் கான் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகின்றது.
 
இந்த வழக்குகில் இருந்து, விடுதலையான பின்பே, திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் சல்மான் கூறியிருந்தார். ஆனால், இந்த வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதால், சல்மான்கான் திருமணமும் தள்ளிப்போகின்றது.