வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (09:52 IST)

அப்துல் கலாம் பெயரில் புத்தாக்க பயிற்சி மையம்: அசாம் அரசு அறிவிப்பு

அசாம் மாநிலத்தில் அப்துல் கலாம் பெயரில் புத்தாக்க பயிற்சி மையம் விரைவில் அமைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் தருண் கோகாய் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தருண் கோகாய் கூறியதாவது:-
 
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவராக இருந்த, மறைந்த அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானி. மனித நேயம் மிக்கவர். ஆசிரியராக பணியாற்றி இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டியவர்.
 
அவரது நினைவைப் போற்றும் வகையில் அசாமில் புத்தாக்க பயிற்சி மையம் விரைவில் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த மையத்துக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மையம் என்று பெயர் சூட்டப்படும்.
 
இதனால், அசாம் மாநிலம் மட்டுமல்லாது, வடகிழக்கு மாநிலங்களிலுள்ள இளம் தொழிலதிபர்கள், மற்றும் படைப்பாளிகள் உருவாக இந்த மையம் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு  தருண் கோகாய் கூறியுள்ளார்.