வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 அக்டோபர் 2018 (15:25 IST)

பாலியல் புகார் - மன வேதனையில் மர்ம உறுப்பை வெட்டிக்கொண்ட சாமியார்

தன் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டதால், மன வேதனையடைந்த சாமியார், தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார்.
 
உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் மாதானி பாபா என்ற சாமியார் வசித்து வருகிறார். இவரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஆசி பெற்று செல்கின்றனர். இவர் அந்த ஏரியாவில் படு பேமஸ். இவர் மீது பொறாமை கொண்ட சிலர், மாதானி பாபா மீது பாலியல் புகாரை சுமத்திவிட்டனர்.
 
தன் மீதான பாலியல் புகார் ஒரு கட்டுக்கதை என்றும் தன் வளர்ச்சி பிடிக்காமல் இவ்வாறு யாரோ செய்துவிட்டனர் என சாமியார் கூறியும் யாரும் நம்பிய பாடில்லை.
 
இதனால் மன வேதனையடைந்த மாதானி பாபா, தன் மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். தற்பொழுது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.