வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 11 நவம்பர் 2018 (16:25 IST)

சிகிரெட் பிரச்சனையில் கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை

ரயிலில் சிகிரெட் பிடித்த நபரை கண்டித்த கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பஞ்சாப்பை சேர்ந்த பெண் ஒருவர் சாமி பூஜையில் கலந்து கொள்வதற்காக பீகாரை நோக்கி ரயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரயிலில் இருந்த நபர் ஒருவர் சிகிரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.
 
இதனை அந்த கர்ப்பிணிப்பெண் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் அந்த பெண்மணியை அடித்துக் கொன்றுள்ளார். இதையடுத்து அந்த கொடூரனை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். மனசாட்சியே இல்லாமல் கர்ப்பிணியை கொன்ற இவனையும் கொல்ல வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.