வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 ஏப்ரல் 2018 (08:21 IST)

அண்ணா என்னை விட்டுவிடுங்கள் எனக் கதறிய சிறுமியை சீரழித்த கும்பல்(வைரல் வீடியோ)

பீகாரில் சிறிமியை ஒரு கும்பல் வழிமறித்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 9 வயது சிறுமி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதேபோல், உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்.ல்.ஏ உள்ளிட்ட 5 பேரால் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படார். இதே போல் பல சம்பவங்கள் நாடு முழுவதும்  நடைபெற்று வருகின்றன.
 
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அனைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 
 
இதற்கெல்லாம் பயப்படாத சில அயோக்கிய கும்பல், தொடர்ந்து பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் பீகார் மாநிலம், ஜெஹனபாத் என்ற இடத்தில் பட்டப்பகலில் சிறுமியை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என சிறுமி கதறிய போதும், அந்த மனித மிருகங்கள் சிறுமியை சீரளித்துள்ளனர். இதனை அந்த கும்பலில் ஒருவன் வீடியோவாக எடுத்துள்ளான். வீடியோவானது வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் விதமாக உள்ளது.

நன்றி: 24 ghanta