1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 செப்டம்பர் 2018 (06:35 IST)

நள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுப் படுகொலை - ரௌடிகள் அட்டுழியம்

டெல்லியில் நேற்று நள்ளிரவு தலைமைக் காவல் அதிகாரி ஒருவர் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரௌடிகளில் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுவரை பொதுமக்களை மட்டுமே தாக்கி வந்த அவர்கள் சமீபகாலமாக போலீஸாரையே தாக்குகின்றனர். அப்படி டெல்லியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
டெல்லியில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த ராம் அவ்தார் என்பவர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த மர்ம நபர்கள் ராமை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் நிலை குலைந்து போன அவர் சம்பவ இடத்திலே பலியானார். 
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு தலைமைக் காவலரே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் டெல்லியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.