1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 12 ஜூன் 2018 (14:40 IST)

காதலனுடன் சண்டை - பேஸ்புக் லைவில் தற்கொலை செய்த இளம்பெண்

மேற்கு வங்கத்தில் பெண் ஒருவர் தனது காதலனுடன் ஏற்பட்ட சண்டையால், பேஸ்புக் லைவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர். இதனால் அவர்களை கஷ்டப்பட்டு வளர்க்கும் பெற்றோர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகிறார்கள்.
 
மேற்கு வங்க மாநிலம்  பாரகான் மாவட்டம் சோனார்புரை சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார்.
 
இந்நிலையில் காதலர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால், அந்த பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அந்த பெண் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, தனது தற்கொலையை காதலன் பார்க்க, தனது தற்கொலையை பேஸ்புக் லைவ் செய்தவாறே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
பணிமுடிந்து வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் பெற்றோர் மகளின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் அந்த பெண்ணின் காதலனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.