வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 செப்டம்பர் 2018 (10:09 IST)

தலைமுடி கொட்டியதால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்

கர்நாடக மாநிலம் மைசூருவில் இளம்பெண் ஒருவர் தலைமுடி கொட்டியதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் நேகா(19) என்ற இளம்பெண் விடுதியில் தங்கி பிபிஏ படித்து வந்தார். இவர் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
 
இந்நிலையில் நேகா சில தினங்களுக்கு முன்பு தனது முடியை அழகாக வெட்டுவதற்காக பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அங்கு நேகவின் முடிக்கு ஊழியர்கள் ஏதோ கெமிக்கலை தடவியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது முடி கொட்டியது. இதனைத் தடுக்க பல வழிகளை முயற்சி செய்தபோதும் அவரது முடி உதிர்வு குறையவில்லை.
 
இதனால் மனமுடைந்த அவர், கல்லூரிக்கு கூட செல்லாமல் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் பயங்கர விரக்தி அடைந்த அவர், லட்சுமண தீர்த்த நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் தற்கொலைக்கு காரணமான அழகு நிலைய ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். முடி கொட்டியதற்காக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கல்லூரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.