வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By murugan
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2015 (10:59 IST)

வாட்ஸ்-அப் பயன்படுத்துவரின் எண்ணிக்கை 90 கோடியை தொட்டது

செல்போனில் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியது.

பொதுவாக, இப்போது பெரும்பாலானோர் கையில் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதில், வாட்ஸ்-அப் ஐ பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அப்படி பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 90 கோடியை தாண்டியுள்ளது. இந்த தகவலை வாட்ஸ்-அப்பின் இணை நிறுவனர் ஜான் கூம் தெரிவித்துள்ளார். வாட்ஸ்-அப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை இந்தியா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு நவம்பர் மாத நிலவரப்படி, இந்தியாவில் 7 கோடி பேர் வாட்ஸ்-அப் வசதியை பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவிதுள்ளார்.