1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 27 ஜூன் 2016 (12:55 IST)

மகராஸ்டிராவில் 8 நாள் குழந்தைக்கு பான்கார்டு

மகராஸ்டிரா மாநிலத்தில் 8 நாள் குழந்தைக்கு 4 நாட்களில் பான்கார்டு வழங்கப்பட்டுள்ளது.


 

 
நாட்டில் தனி நபருக்கு வருமான வரி கணக்கு தொடர்பாக ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டும் அட்டை தான் பான்கார்டு. பானகார்டு வங்கி கணக்கு தொடரவும், அரசு உதவிகள் பெறவும் தேவைப்படும் ஆவணங்களில் ஒன்றாக பான்கார்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பொது மக்களிடையே பான்கார்டு வாங்குவது பிரபலமாகி வருகிறது.
 
இந்நிலையில் மகராஸ்டிரா மாநிலத்தில் 8 நாள் குழந்தைக்கு பான்கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் தந்தை ஒட்டுமொத்த குடும்பத்துக்கு பான்கார்டு விண்ணப்பித்துள்ளார். அதில் அந்த குழந்தைக்கும் பான்கார்டு கிடைத்துள்ளது. விண்ணப்பித்த நான்கு நாட்களிலே கிடைத்துள்ளது.
 
மேலும் அந்த குழந்தைக்கு கிடைத்துள்ள சட்டப்படியான முதல் ஆவணம் இந்த பான்கார்டு.