1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2015 (11:08 IST)

நாகை மீனவர்கள் 7 பேரை மீண்டும் சிறைபிடித்தது இலங்கை கடற்படை

வங்கக்கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறைபிடித்தனர்.


 
 
நாகை மாவட்டம் நம்பியார் நகரைச் சேர்ந்த சத்தியன் என்பவர் உட்பட 7 மீனவர்கள், விசைப்படகு ஒன்றில் இருநாட்களுக்கு முன் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே அவர்கள்  மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது, அங்குவந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி பருத்தித்துறை கடற்பரப்பில் நுழைந்ததாக கூறி அவர்களை  கைது செய்து சிறைபிடித்துள்ளனர். விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். தற்போதைய கைது நடவடிக்கைமூலம், இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.