வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2015 (16:45 IST)

10ஆம் பள்ளி மாணவியை நண்பர்களே 7 பேர் மாறி மாறி கற்பழித்த கொடூரம்

பெங்களூருவில் 10ஆம் வகுப்பு மாணவியை சிறை வைத்து மாறி மாறி கற்பழித்த அவருடைய நண்பர்கள் 7 பேரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
பெங்களூரு ஹனுமந்த நகர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி அந்த பகுதியில் உள்ள சில வாலிபர்களுடன் பழகி வந்துள்ளார். ஆனால் இதனை அவருடைய பெற்றோர்கள் கண்டித்து வந்துள்ளனர்.
 
ஆனாலும், பெற்றோர்களின் அறிவுரையும் மீறி மாணவி தொடர்ந்து தனது ஆண் நண்பர்களிடத்தில் பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி (வியாழக்கிழமை) 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் வெளியே சென்ற மாணவி மாயமாகியுள்ளார்.
 
அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து பெற்றோர்கள் ஹனுமந்த நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில், மாணவியுடன் பழகிவந்த வாலிபர்களும் மாயமாகியிருப்பது தெரியவந்தது.
 
இந்நிலையில் வாலிபர்களின் செல்போன்கள் மூலம் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்த காவல் துறையினர், அந்த வாலிபர்களிடம் இருந்து மாணவியை மீட்டுள்ளனர். அப்போது நண்பர்களுடன் சுற்றி பார்க்க சென்றபோது, அவர்கள் தன்னை ஒரு வீட்டில் சிறைவைத்து மாறி மாறி கற்பழித்ததாக தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து மாணவியின் நண்பர்கள் 7 பேரை ஹனுமந்த நகர் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் மீட்கப்பட்ட மாணவிக்கும், கைதானவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.