1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bharathi
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:15 IST)

மதிய உணவு உட்கொண்ட 50 பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

மத்திய பிரதேசத்தில் மதிய உணவு உட்கொண்ட 50 பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் சாட்டர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு இன்று வழக்கம் போல மதிய உணவு வழங்கப்பட்டது. அதனை மாணவர்கள் உட்கொண்டனர். ஆனால்  சிறிது நேரத்திலேயே மாணவர்கள் அனைவரும் மயங்கி சரிந்தனர். இதனால் பதறிப்போன பள்ளி நிர்வாகம் 50 குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தரமில்லா உணவை உட்கொண்டதே மாணவர்களின் மயக்கத்திற்கு காரணம் என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பரிமாறப்பட்ட உணவில் கூழாங்கற்கள் இருந்ததாக மாணவர்கள் கூறினர். மதிய உணவு உட்கொண்டு பள்ளி குழந்தைகள் மயக்கம் அடைந்தது குறித்து விசாரணை நடத்த தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.