செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2016 (10:38 IST)

காஷ்மீரில் பயங்கர துப்பாக்கி சண்டை: லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் 5 பேர் பலி

காஷ்மீரில் ராணுவ வீரர்களால் சுட்டு கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜோன்ரேஷி கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், அவர்கள் ராணுவ பள்ளி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் பாதுகாப்புப் படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர் அந்த கிராமத்தை சுற்றி வளைத்தனர். பின்னர், ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. 

இதில் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்திய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
இந்த சண்டையின் போது, தீவிரவாதிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்