வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2017 (16:01 IST)

இரண்டாவது முறையாக வங்கிகளுக்கு தொடர் விடுமுறை!!

வங்கிகலுக்கு வரும் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 4 நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


 
 
அக்டோபர் மாதம், வரும் 29 ஆம் தேதி ஆயுத பூஜை, 30 ஆம் தேதி விஜய தசமி, அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி வருகிறது.
 
இதனால், அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் 28 ஆம் தேதிக்கு முன் வங்கி பரிவர்த்தனைகளை முடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, 15 ஆம் தேதி சுதந்திர தினம் என நான்கு நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.