வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 23 ஏப்ரல் 2014 (18:11 IST)

3 குழந்தைகளை விஷம் கொடுத்தது கல்லால் அடித்து கொன்ற தாய்

ராஜஸ்தானில், மன அழுத்தத்தால், தாயே தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
 
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வா மாவட்டத்தில் தனது கணவருடம் வசிப்பவர் பின்னாபாய் கோலி. இவர் தனது 6 வயதுடைய மோனிகா, 4 வயதுடைய குஷ்பு மற்றும் 2 வயதான முஸ்கின் என்ற மகன் ஆகியோருடன் வெளியே சென்றுள்ளார்.
 
ஆனால், மாலையில் அவர் மட்டும் தனியாக வீடு திரும்பியுள்ளார். இதைக்கண்ட அவரது மாமியார் குழந்தைகள் எங்கே என்று கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் கூறிய பதில் மாமியாருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. கில்லாக் பகுதியில் தனது குழந்தைகளை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது உறவினர்கள் மற்றும் கிராமத்தினருடன் குழந்தைகளை தேடியுள்ளார்.
 
கொலை செய்ததாக கூறிய பகுதிக்கு சென்று பார்த்த அவர்கள் இங்கு 3 குழந்தைகளும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்த பின்னர் கல்லாலும் தாக்கியதால், இந்த 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். மனஅழுத்தம் காரணமாக இந்த கொடூர சம்பவத்தை குழந்தைகளின் தாயான பின்னாபாய் செய்துள்ளது தெரியவந்ததாக கூறப்படுகிறது.