1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (09:49 IST)

ஹாயாக தண்டவாளத்தில் சரக்கடித்த 3 பேர்: கடைசியில் நேர்ந்த சோகம்

டெல்லியில் தண்டவாளத்தில் மது அருந்திய 3 பேர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லி நங்லாய் ரயில் நிலையம் அருகே 3 பேர் தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டு மது குடித்துக் கொண்டிருந்தனர். போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் தண்டவாளத்தில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர்.
 
அப்போது அந்த அவ்வழியாக வேகமாக வந்த ரயில், அவர்கள் மீது மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.