வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2015 (11:40 IST)

ராணுவ வீரர்கள் மூவர் உயிரிப்பு

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர்கள் மூன்று உயிரிழந்தனர்.


 
 
ஜம்மு - காஷ்மீரின் ஹன்ட்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கவச வாகனங்களுடன் அப்பகுதிக்கு ராணுவ வீரர்கள் விரைந்தனர்.
 
தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை நோக்கி ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தீவிரவாதிளும் எதிர்தாக்குதலை தொடுத்தனர். நீண்ட நேரமாக நடைபெற்று வரும் இந்த தூப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.