செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2015 (12:25 IST)

மின்சார ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி: வீடியோ இணைப்பு

மும்பை மின்சார ரெயிலில் கூட்ட நெரிசலில் வாலிபர் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


 

மும்பை அருகே உள்ள கோபர் பகுதியிலிருந்து மின்சார ரெயில் சி.எஸ்.டி. நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. அதில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் படிகளில் தொங்கியபடி இளைஞர்கள் பயணம் செய்தனர்.அப்போது நாக்டே(21) என்ற வாலிபர் படியிலிருந்து தவறி விழுந்தார். இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தவறி விழுந்த வாலிபர் அருகில் உள்ள சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அஃவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நாக்டே வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாலிபர் தவறி விழுந்ததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.