வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 21 அக்டோபர் 2015 (23:14 IST)

ஹரியானாவில் தலித் குடும்பம் தீ வைப்பு எரிப்பு: 7 போலீசார் சஸ்பெண்ட் - 3 பேர் கைது

ஹரியானாவில் தலித் குடும்பத்தினரை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவத்தில் 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
 

 
ஹரியாணா மாநிலம், பரிதாபாத் மாவட்டம், பல்லாப்கரையை அடுத்த சன்பெட் கிராமத்தில் ஜிதேந்தர் என்ற தலித் குடும்பத்தைச் சேர்ந்த வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். உயர் வகுப்பைச் சேர்ந்த சிலர் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
 
இதில் அவரது இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானது. இந்த கொடூர சம்பவத்தில், அவரும், அவரது மனைவியும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை, டெல்லி  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
 
ஜிதேந்தர் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க ஏற்கனவே போலீசாருக்கு உத்தரவிட்டும், அவருக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்பதால் இதற்கு காரணமான 7 போலீசார் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர்.
 
மேலும், தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடை 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 8 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.