வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2016 (22:20 IST)

டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் பலி

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிக்க தொடங்கியுள்ள நிலையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.


 

 
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது வரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனியில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 13 வரை டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் இறந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
 
கடந்த ஜூலை மாதம் பரவ தொடங்கிய டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,158 ஆக அதிகரித்துள்ளது.