வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2016 (18:35 IST)

ஓலா டாக்ஸி டிரைவர்கள் அட்டூழியம்: 12 வயது சிறுமி வன்கொடுமை

கொல்கத்தாவில் இரண்டு ஓலா கார் ஓட்டுனர்கள், 12 வயது சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.


 

 
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் உள்ள புராபஜார் பகுதியில் தெருவேர வாசிகள் அதிக அளவில் உள்ளனர். அதில் ஒரு 12 வயது சிறுமியை இன்று காலை 4 மணி அளவில் ஓலா கார் ஓட்டுனர்கள் காரில் கடத்தி சென்றனர்.    
 
இரண்டு கார் ஓட்டுனர்கள் சேர்ந்து, ஓடும் காரிலே ஒருவரொருவர் மாறி மாறி அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் டாப்சியா என்ற இடத்தில் உள்ள கால்வாயில் வைத்து முக்கி கொலை செய்துள்ளனர்.
 
மகளை காணவில்லை என்று அந்த சிறுமியின் தாயார் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை தெரிவித்து காரின் பதிவு எண் மூலம், அந்த கார் ஓட்டுனர்களை கண்டுப்பிடித்து கைது செய்தனர்.
 
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை கால்வாயில் கொலை செய்தாதாக தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.