வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (12:05 IST)

முக்கிய செய்தி வெளியிடப்போகிறேன்: மோடியின் ஒத்த டுவீட்: இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு!!

இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடையே உரையாட இருக்கிறேன் என பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் காங்கிரஸ், பாஜக சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.
 
இந்நிலையில் சற்று முன்னர் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்ளிடையே உரையாட இருக்கிறேன். முக்கிய விஷயத்தை உங்களிடம் பகிர காத்திருக்கிறேன் என கூறியுள்ளார். இதனால் மோடி என்ன கூறப்போகிறார் என அரசியல் கட்சியினரும் நாட்டு மக்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.