1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (15:57 IST)

பாஜக - அதிமுகவுக்கு எதிரான பிரசாரத்திற்கு மறுப்பு - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆவார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சில காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சந்தித்தார். 
 
அப்போது அவர் கூறியதாவது :
 
நாட்டில் உள்ள நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் பாரதிய ஜனதா கட்சியின் பிடியில் உள்ளது என்று குற்றம்சாட்டினார். பாஜக அதிமுக கூட்டணி கட்சிக்கு எதிராக 30 இடங்களில் பிரசார செய்ய அனிமதி கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 
மேலும், நேற்று வெளியான பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இந்தியா முழுவதும் சமஸ்கிருதத்தை கற்பிப்போம் என்று இருந்ததைக் கூறிக் குற்றம் சாட்டினார்.