அரை நூற்றாண்டிற்கு முன்னர் ஒரு நாள் அதிகாலையில் சென்னையில் வாழ்ந்து வந்த தமிழறிஞர் மு. வரதராசனாரின் இல்லக் கதவு தட்டப்பட்டது. வந்து திறந்தார் மு.வ., வாயிலில் நின்ற அந்த இளைஞரை அவர் முன் பின் கண்டதில்லை.