வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (18:40 IST)

சாலையில் செல்வோருக்கு பணம் கொடுத்து சோதிக்கும் கூகுள் நிறுவனம் !

கூகுள் நிறுவனம் தனது பிக்ஸல் ஸ்மார்ட் போனை முக அடையாளத்தைப் பயன்படுத்தி திறக்கும் தொழில்நுட்பத்துக்கான ஆய்வுக்கு, சாலையில் செல்வோருக்கு எல்லாம்  5 டாலர்களை கொடுத்து ஆச்சர்யப்படுத்திவருகிறது.
இன்றைய நவீன காலத்தில்  முக அடையாளத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போனை திறக்கும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துவந்தாலும் கூட அதில் பல குறைபாடுகள் உள்ளதாக பயனாளர்கள் குறை கூறினர். இந்நிலையில் வரும் அக்டோபரில் சந்தைக்கு வரும் என பயனாளர்கள் எதிர்பார்த்துள்ள பிக்ஸல் 4 மற்றும் பிக்ஸல் 4 எக்ஸ் எல் ஸ்மார்ட் போன்களில் குறைகள் எதுவும் இருக்காது என கூகுள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்காக அமெரிகாகவில்  உள்ள சாலையில் செல்வோரிடம் சென்று, ஸ்மார்டை போனை அவர்களின் முக அடையாளத்தைப் பயன்படுத்தி செய்துவருகிறது. இந்த சோதனைக்காக ஒவ்வொருவருக்கும் சுமார் 5 டாலருக்கான சான்றிதழை ( இந்திய மதிப்பிஉல் 350 ரூபாய் ) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.