வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 18 அக்டோபர் 2019 (20:26 IST)

ஜியோ நஷ்டத்தில் ..? ஏர்டெல் , வோடபோன் மீது கடுப்பான அம்பானி !என்ன ஆச்சு ?

கடந்த 2017 ஆம் ஆண்டு ரிலையன்ஸ்  அதிபர் முகேஷ் அம்பானி,  இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தனது ஜியோ தொலைத் தொடர்பு சேவையை இலவசமாக அறிவித்தார். அதுவரை செல்போனில் சில  எம்பி நெட்டுக்காக ரீ சார்ஜ் செய்ய பல நூறு ரூபாய்கள் செலவு செய்து வந்த ஏர்டெல், வொடபோன் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறினர்.
அதனால் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களும் தங்களின் நெட் ரீசார்ஜ் செய்யும் விலையைக் குறைத்தனர்.
 
அதனால் இந்தியாவில் ரிலையன்ஸ் மொபைல்களை போல் அந்த நிறுவனத்தின் ஜியோ  நெட்வொர்க்கும் இணையதள புரட்சிக்கு வித்திட்டுள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனம்  ஜியோ வீடியோ கால் அஸிஸ்டெண்ட் என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் ஜியோ நெட்வொர் இருந்து வேறு தொலைதொடர்புக்கு கால் செய்தால் 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
 
இதையடுத்து ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கால்களை இலவசமாக அறிவித்துள்ளன.
 
இந்நிலையில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க வேண்டுமென டிராய்க்கு ஜியோ நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. அதில், ஜியோவிலிருந்து லேண்ட்லைன்க்கு கால் செய்தால் நிமிடத்திற்கு 8 காசுகளும், அதே மொபல் போன்களில் இருந்து கால் செய்தால் நிமிடத்திற்கு கால் செய்தால் 6 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
ஏர்டெல், வோடபோன்கள், மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் செய்யும் செயலால் ஜியோ நிறுவனத்துக்கு நிமிடத்துக்கு 52 காசுகள்  நஷ்டம் ஏற்படுவதாக கூறியுள்ளது.
 
மேலும் லேண்ட்லைன் மற்றும் மொபைல் போன்களுக்கு இடையே உள்ள தரவுகளை மாற்றக் கூடாது எனவும் அதனால் பலத்த இழப்பு ஏற்படும் எனவும் டிராய்க்கு  (trai) ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் ஏர்டெல், வோடபோன், பி.எஸ்.என்.எல்.ஆகிய நிறுவங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.