வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2015 (09:59 IST)

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் புதிய சர்ச்சை: சர்ப்ராஸ் கான் - உத்தப்பா மோதலா?

நடந்து முடிந்த லீக் ஆட்டத்தில் பெங்களூவின் சர்ப்ராசுக்கும், கொல்கத்தாவின் உத்தப்பாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுத்துள்ளது.
 
ஏப்ரல் 11 அன்று நடந்து முடிந்த ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் கோலி தலைமையின் கீழான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 
 

 
இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சர்ப்ராஸ் கான் மற்றும் கொல்கத்தாவின் உத்தப்பா இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் உத்தப்பா சர்ப்ராஸ் கானின் காலரை பிடித்து உலுக்கியதாக தெரிகிறது.
 
இதுகுறித்து கொல்கத்தா கேப்டன் கம்பீர் கூறுகையில், இதில் உத்தப்பா மீது தவறு ஏதும் இல்லை. மேலும் களத்தில் வெற்றி பெற சில நேரங்களில் ஆக்ரோஷமாக செயல்பட நேரிடும்.  வீரர்களுக்கு நடுவில் இது போல் சில சர்ச்சைகள் அரங்கேறுவது சகஜம் தான் என்றார்.