வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2015 (11:18 IST)

ஐ.பி.எல்: ஏலத்தில் பெருந்தொகை கொடுங்கள் என்று யாரையும் அணுகவில்லை - யுவராஜ் சிங்

நடந்து முடிந்த ஐ.பி.எல் ஏலத்தில் தனக்கு 16 கோடி ரூபாய் என்ற பெருந்தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்க யாரையும் நான் கேட்கவில்லை என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
 

 
நடப்பு ஐ.பி.எல் போட்டியில் மட்டுமின்றி ஐ.பி.எல் வரலாற்றிலேயே 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டவர் யுவராஜ் சிங். இவ்வளவு பெருந்தொகை கொடுத்து இவரை டெல்லி டேர்டேவில்ஸ் அணி வாங்கியுள்ளது.

மேலும் இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில், என்னை பெருந்தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கும்படி நான் எவரையும் அணுகவில்லை என்றார். மேலும் சிறிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து விளையாடியிருப்பேன் என கூறியுள்ளார்.