வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

பெருங்குடலை சுத்தம் செய்ய சில இயற்கை வழிமுறைகள்!!!!

பெருங்குடலை சுத்தம் செய்ய சில இயற்கை வழிமுறைகள்!!!!

வாயில் தொடங்கி ஆசனவாய் வரை உள்ள நம் செரிமான மண்டலத்தின் கடைசிப் பகுதி… பெருங்குடல். இந்தப் பெருங்குடல் சுமார் ஐந்து அடி நீளமும் இரண்டரை இன்ச் சுற்றளவும் கொண்டது. இதன் முக்கியப் பணி, உணவு செரிமானத்துக்குப் பிறகு ஏற்படும் கழிவுகளை வெளியேற்றுவதும் நீர் இழப்பைத் தவிர்ப்பதும்தான்.


 

பெருங்குடலில் நன்மை தரும் பாக்டீரியா வசிக்கிறது. இந்த பாக்டீரியா வைட்டமின் கே மற்றும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் உற்பத்திக்கு உதவியாக இருக்கிறது.
 
சில நேரத்தில் பெருங்குடலிலேயே கழிவுகள் தங்கிவிடலாம். அது நாம் சாப்பிட்ட உணவின் எச்சம், இறந்த செல் திசு, வயிற்றில் சுரக்கும் சளி போன்ற திரவம், ஒட்டுண்ணியாகவும் இருக்கலாம். இப்படி தங்கும் கழிவுகளால் நமக்குப் பிரச்னைதான். 
 
கழிவுகள் என்றாலே விஷம்தான். இப்படி தங்கிவிட்ட நஞ்சானது மீண்டும் ரத்தத்தில் கலந்து, நல்ல பாக்டீரியாவைப் பாதித்து ஊட்டச்சத்து உற்பத்தியைத் தடுத்துவிடும். மேலும், செரிமான மண்டலத்தின் செயல்திறனையே பாதித்து மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவருக்கு இப்படி கழிவு தங்கினால், தலைவலி, முதுகுவலி, மலச்சிக்கல், சோர்வு, வாயில் கெட்டவாடை, உடலில் துர்நாற்றம், எரிச்சல், குழப்பமான மனநிலை, தோல் பிரச்னைகள், வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு, இடுப்புவலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதனால் பெருங்குடலை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.
 
நீர்
 
பெருங்குடல் சுத்தம், நீங்கள் செய்ய சிறந்த வழி நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அது இயற்கையான முறையில் உடலில் இருந்து தீங்கு செய்யும் நச்சுகளையும் மற்றும் கழிவுகளையும் வெளியே தள்ளி விடுகிறது.
 
ஆப்பிள் சாறு
 
புதிதாக எடுக்கப்பட்ட ஆப்பிள் சாறு பருங்குடலை சுத்தம் செய்யும் ஒரு சிறந்த இயற்கை வழியாகும். இந்த சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது கல்லீரல் மற்றும் செரிமானத்தையும் சுத்தம் செய்கிறது. அப்படி தேர்ந்தெடுக்கும் ஆப்பிள் சாறு புதிதாகவும், ஆர்கானிக் ஆப்பிளை தேர்வு செய்வது சிறந்தது. ஆப்பிள் சாறு குடித்த 30 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு குவளையில் குடிக்க நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் பலன் கிடைக்கும். 
 
எலுமிச்சை சாறு
 
எலுமிச்சை ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்த வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் செரிமானத்துக்கு நல்லது. எனவே, எலுமிச்சை சாறு பெருங்குடல் சுத்தம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. எலுமிச்சை சாற்றோடு, கடல் உப்பு ஒரு சிட்டிகை மற்றும் தண்ணீர் கொஞ்சம் தேன் கலந்து. காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பயன்பெறமுடியும்.
 
பச்சை காய்கறி சாறு
 
புதிய காய்கறி சாறு பல முறை குடிக்க அதாவது பச்சை காய்கறிகள் சாற்றை, குறிப்பதால் நச்சுகளை நீக்க உதவுகிறது. ரெடிமேட் ஜூஸ் குடிப்பதை காட்டிலும் நாம் செய்ய கூடிய சாறு ஆரோக்கியமானதாக இருக்கும்.
 
நார் சத்து அதிகமுள்ள உணவுகள்
 
நார் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணுவதால் தீங்கு செய்யும் நச்சுகளை பெருங்குடலில் இருந்து சுத்தப்படுத்துவதோடு கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இது குடல் இயக்கம், மேம்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில், நார் அதிகமுள்ள உணவுகளை உணவுக்குழாய் எந்த பிரச்சினையின்றி சத்துக்களை பெற உதவும்.
 
நார் சத்துக்கள் நிறைந்த உணவுகளான பட்டாணி, ப்ரோக்கோலி, ஆப்பிள், புதிய காய்கறிகள், புதிய பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உணவில் நார்ச்சத்து நிறைய சேர்க்க முடியும். தானியங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், பீன்ஸ் மற்றும் விதைகள் ஆகியவை அதிக அலவு நார் சத்துக்களை கொண்டிருக்கும்.
 
தயிர்
 
தயிர் அஜீரணம், வாய்வு பிரச்சனை, ஒழுங்கற்ற குடல் இயக்கங்கள் மற்றும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும் ஆரோக்கியமான புரோபயாடிக் உணவாகும்.