1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sasikala
Last Updated : சனி, 21 மே 2016 (16:39 IST)

திருமண முறிவு - கருத்து சொன்ன கரீனா

திருமண முறிவு - கருத்து சொன்ன கரீனா

கரீனா கபூர், சைப் அலிகான் திருமணம் நல்லாத்தானே போய்கிட்டிருக்கு என்று சந்தேகத்தில் நெற்றி சுருக்க  வேண்டாம்.


 


இந்திப் படவுலகில் பரவலாக நடந்து வரும் உறவு பிரிதலை குறித்துதான் கரீனா கருத்து கூறியுள்ளார்.
 
பெண்களின் பொருளாதார விடுதலை, ஏன் நான் மட்டும் அதை செய்யணும்? ஏன் அதை நான் செய்யக் கூடாது?  என்று ஆண்களை நோக்கி கேள்விகளை எழுப்புகிறது. ஆணாதிக்கத்துக்கு அவர்கள் அடிபணிய மறுக்கிறார்கள். ஆண்களின் ஈகோ அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. பெரும்பாலான காதல் மற்றும் மண முறிவுக்கு இந்த  ஈகோதான் முதல் வில்லனாக உள்ளது. அப்பாவி ஆணும், அடங்கா பெண்ணுமாக சில காம்பினேஷன்களும் இருக்கத்தான் செய்கின்றன.
 
ஹிர்த்திக் ரோஜன் - சூசனே தம்பதியை தொடர்ந்து மலைக்கா அரோராவும் - அர்பாஸ்கானும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளனர். ஏற்கனவே நடிகர் பர்கான் அக்தர் தனது மனைவியை பிரிந்துள்ளார். திருமண முறிவு  மட்டுமின்றி காதல் முறிவும் இந்தியில் தாராளம். ரன்பீர் கபூர், கத்ரினா கபூர் இணையும் தங்களின் காதலை  முறித்துக் கொண்டுள்ளது. 
 
இந்நிலையில், இந்த முறிவுகள் குறித்து கரீனாவிடம் கருத்து கேட்டனர். வாழ்க்கையில் உறவு முறிவும் ஒரு  கட்டம்தான். அதனை கடந்து செல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
அப்படியொரு கட்டம் உங்கள் வாழ்வில் வராமலிருக்கட்டும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்