வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2015 (13:01 IST)

வாழ்க்கை வளம்பெற கிடைக்க வேண்டிய பதினாறு பேறுகள்....

பெரியவர்கள் ஆசிர்வதிக்கும் போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பார்கள்
 

 

 
பெரியவர்கள் ஆசிர்வதிக்கும் போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பார்கள்.
 
'பதினாறும் பெற்று'என்பது குழந்தை பெற்றுக் கொள்வதை குறிக்கவில்லை என்றும், வாழ்க்கை நல்ல விதமாக இருப்பதற்கு வேண்டிய பதினாறு விஷயங்களையே குறிக்கின்றன.
 
அவை:
 
1. வாழ்க்கை நமக்கு வழிகாட்டக்கூடிய கல்வி
 
2. நீண்ட ஆயுள்
 
3. நம்பிக்கைக்குரிய நண்பர்கள்
 
4. வாழ்க்கைக்கு தேவையான செல்வம்
 
5. உழைப்பிற்குதேவையான செல்வம்
 
6. நோயற்ற வாழ்க்கை
 
7. எதற்கும் கலங்காத மன வலிமை
 
8. அன்புள்ள கணவன் மனைவி
 
9.  அறிவு ஒழுக்கம், ஆற்றல் கொண்ட குழந்தைகள்
 
10. மென்மேலும் வளரக்கூடிய புகழ்
 
11. மாறாத வார்த்தை
 
12. தடங்கலில்லாத வாழ்க்கை
 
13. சிக்கனமாக செலவழித்து சேமிப்பை அதிகரித்தல்
 
14. திறமையான குடும்ப நிர்வாகம்
 
15. நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு
 
16. பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல்