செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 24 மார்ச் 2016 (15:07 IST)

ஆர்கானிக் உணவுப்பொருட்கள் ஒரு கண்ணோட்டம்

ஆர்கானிக் உணவுப்பொருட்கள் ஒரு கண்ணோட்டம்

ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான், நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள், நடுவில், தலைதூக்கி விட்டன.


 


இப்போது மீண்டும் ஆர்கானிக் உணவுப்பொருட்களுக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத ரசாயன கலப்பில்லாத உணவுப் பொருட்களை சார்ந்தது.
 
உப்பு:

இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுகளுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு சிலர்தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் அத்து தேவைதான். ஆனா அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சனைதான்.
 
எண்ணெய்:
 
வெண்ணெய், நெய், வனஸ்பதி, இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால் கொலஸ்ட்ரால் தான் உடலில் சேரும். மாறாக ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.
 
தானியங்கள்:
 
எந்த கலப்பும் செரிவூட்டலும் இன்றி இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தனியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தனியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால் ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.
 
பாலிஷ் அரிசி:
 
அரிசி சதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால் புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போது தான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில் தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன.
 
காய்கறிகள், பழங்கள்:
 
உரம் ரசாயன கலப்பு சார்ந்த்து விளைவிக்கப்பட்ட செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால் உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள் கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில்கூட கிடையாது.
 
பால்:
 
பால் உடலுக்கு நல்லது தான். ஆனால் நாம் சாப்பிடும் பாலில் கொழுப்புச் சத்து நீக்கப்பட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆண்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது.
 
காபி, டீ, சர்க்கரை:
 
மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றைவாங்கி அருந்தலாம். சர்க்கைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி, வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.