வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2016 (11:29 IST)

ரூ.6,050.10 கோடி மதிப்பிலான 5 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

ரூ.6,050.10 கோடி மதிப்பிலான கெடிலா ஹெல்த்கேர் உள்ளிட்ட 5 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


 

 
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் கூட்டத்தில். கெடிலா ஹெல்த்கேர் உள்ளிட்ட 5 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்க பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.
 
அதன் படி, ரூ.6,050.10 கோடி மதிப்பிலான 5 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. 
 
இந்நிலையில், எச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ், கல்ப் குவாரி ஜெனரல் டிரேடிங் உள்ளிட்ட 6 நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கான அனுமதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.