வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 டிசம்பர் 2016 (12:57 IST)

தமிழகத்தில் 58 எஸ்பிடி வங்கிகள் நிரந்தர மூடல்!!

ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கி கிளைகள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தம் 58 கிளைகள் மூடப்பட இருக்கின்றன. 


 
 
ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் எனப்படும் எஸ்பிடி உள்ளிட்ட 5 அசோசியேட் வங்கிகள் எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்படுகிறது. 
 
இந்நிலையில் எஸ்பிடி உள்ளிட்ட 5 அசோசியேட் வங்கிகளின் பணியாளர்கள் சுயமாக ஓய்வுபெற்று செல்லும் வகையில் விஆர்எஸ் திட்டம் அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் மொத்தம் உள்ள 852 எஸ்பிடி வங்கி கிளைகளில் 204 வங்கி கிளைகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தில் மொத்தம் 176 எஸ்பிடி வங்கி கிளைகள் உள்ள நிலையில் இதில் 58 கிளைகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது.