1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By சசிகலா
Last Updated : வியாழன், 3 மார்ச் 2016 (13:41 IST)

நீரிழிவிலிருந்து மீள்வது எப்படி?

நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் பற்றிய தகவல்கள்

நீரிழிவு (diabetes) என்பது வளர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது.


 


தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்.
 
சாப்பிடும்போது நம் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் சத்தை தேவைக்கேற்ப இன்சுலின் சுரப்பி உற்பத்தி செய்து கொள்ளும். இந்தச் சுரப்பி பாதிக்கப்பட்டு இன்சுலினை சுரக்க முடியாமல் போவது அல்லது இன்சுலின் உற்பத்தி குறைவதால் ஏற்படும் பாதிப்புதான் சர்க்கரை வியாதி எனப்படுகிறது.
 
சர்க்கரை வியாதி பொதுவாக மூன்று வகையாகப் பகுக்கப்பட்டுள்ளது.
 
1. இன்சுலின் சார்ந்தது.
 
2. இன்சுலின் சாராதது.
 
3. குறைப்பட்ட சர்க்கரை ஏற்பு நிலை.
 
1. இன்சுலின் சார்ந்த நிலை: கணையத்திலுள்ள இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்லளீல் கோளாறு ஏற்பட்டுள்ளது எனில் இன்சுலின் சுரப்பு பாகங்கள் அழிந்துவிடுவதால் இது தோன்றுகிறது. இதை டைப்-1 வகை நோய் எனக் கூறுகிறார்கள். சிறுவர்கள் மற்றும் ப்தின்மர் பருவத்து விடலைகளைத் தாக்கும் இது பதினாறு வயதுக்குட்பட்டவர்களுக்கு வரும்போது இளவயது சர்க்கரை ஜுவனைஸ் என்று அழைக்கப்படுகிறது.
 
2. இரண்டாம் வகை சர்க்கரையின் போது அறிகுறிகள் மிக மெதுவாக வெளிப்படுவதால், சர்க்கரை நோய் வந்துள்ளது என்பதை அவ்வளவு சுலபமாக யாரும் நம்பிவிட மாட்டார்கள். இவ்வகை சார்ந்த நோயாளிகள் பொதுவாக, நடுத்தர வயது உடையவர்கள், சிறிது எடைகூடிய உஅடம்புள்ளவர்கள். உடற்பயிற்சியில்லா சோம்பல் வாழ்க்கை கொண்டவர்கள்.
 
3. இதை கர்ப்பக்கால சர்க்கரை நோய் என்கிறார்கள். இந்த வகை சர்க்கரை எஓயால் கர்ப்பிணிகளில் இரண்டு முதல் மூன்று விழுக்காட்டினர் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பக் காலத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு, பிரவத்திற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.
 
நீரிழிவு நோய் யாருக்கு ஏற்படும்?
 
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், ஆகியவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
 
நீரிழிவு நோயால் ஏற்படும் பிரச்சனைகள்:
 
இன்சுலின் சமசீர் நிலையை இழப்பதால் ஏற்படுவதாகும். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகமாக தாகமெடுத்தல், அளப்பரிய பசி, ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.
 
நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு இன்சுலின் உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை மருந்துகளின் மூலம் கட்டுபடுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாததால், இவற்றைச் சாதாரணமாக முற்றிலுமாகக் குணமாக்க முடியாது. கணைய மாற்ற சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது.

ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் மறைந்துவிடுகிறது.
 
நீரிழிவு நோயின் அறிகுறிகள்:
 
1. அடிக்கடி சிறுநீர் கழிப்பது
2. அடிக்கடி தாகம்
3. அதிக பசி
4. மிக வேகமாக எடை குறைதல்
5. அதிகமாக சோர்வடைவது
6. கண்பார்வை மங்குதல்
7. வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்
8. திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்
9. பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல்
 
இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படக்கூடியவை.
 
1. பார்வை இழப்பு
2. மாரடைப்பு
3. சிறுநீரகக் கோளாறு
4. பக்கவாதம்
5. கால்களை இழத்தல்
6. கோமா மற்றும் இறப்பு
 
நீரிழிவு நோயினை உறுதி செய்யும் சோதனை முறைகள்:
 
நீரிழிவு நோயினை உறுதிசெய்வதற்கு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அல்லது சர்க்கரையின் அளவானது அளவிடப்படுகின்றது. 
 
உண்ணாநிலை குருதிச் சர்க்கரை அளவு 7.0 மில்லி மோல்/லிட்டர் (126 மில்லி கிராம்/டெசிலிட்டர்)-லும் அதிகமாக அல்லது எதேச்சையான குருதிச் சர்க்கரையின் அளவு 11.1 மில்லி மோல்/லிட்டர் (200 மில்லி கிராம்/டெசிலிட்டர்) - லும் அதிகமாக காணப்பட்டால் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என உறுதி செய்யப்படும்.
 
நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
 
உணவுக்கட்டுபாடு, உடற்பயிற்சி, மருந்துகள், நோய்பற்றிய விழிப்புணர்வு கல்வி. இந்த நான்கு முறைகளை தவறாமல் பின்பற்றினால் நோயைத் தவிர்த்துவிடலாம், அல்லது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளலாம்.