வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By

தினம் ஒரு கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை சாப்பிட்டு  வந்தால், விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும்.
கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக்  கொள்ள உதவும். இதில் வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற  நிறமி அணுக்கள் இவற்றில் உள்ளன.
 
காரட்டை பச்சையாகச் சாப்பிடும்போது அது உடலில் தீங்கிழைக்கும் கொழுப்பைக் குறைத்து  உடலுக்கு நன்மை தரும் கொழுப்பை உருவாக்குகிறது.
 
இதயத்தை ஆரோக்கியமாக வைக்க கேரட் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவானது குறைந்து,  இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். 
 
ஆரோக்கியமான கண்களை பெற கேரட் சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப்  போக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். மேலும் மாலைக் கண் நோயை தடுக்கும். புற்று  நோயிலிருந்து காக்க காரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
காரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல  ஜீரண சக்திதியை தருகின்றது. எனவே காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். 
 
பல் பராமரிப்பு கேரட்டை சாப்பிட்டு வந்தால், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும்  தடுக்கலாம். அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில்  இருந்து விடுபடலாம்.