வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (10:29 IST)

தமிழக பந்த்: திருமாவளவன் கைது

காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து தமிழகத்தில் முழுகடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. அந்த கலவரத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர், தமிழக கடைகள் அடித்து உடைக்கப்பட்டன, தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
 
இதைக்கண்டித்து தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வணிகர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய முழுகடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. பல இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடந்து வருகிறது.
 
இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்பட 100 பேர் பேஸின் பிரிட்ஜ்  பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.