இங்கே, இந்த பாரத திருநாட்டில் கொள்ளை அடித்த பணத்தை சுவிஸ் வங்கிகளின் இரகசிய கணக்குகளுக்கு மாற்றி, அந்த கருப்புப் பணத்தை பூதம்போல் நின்று பாதுகாக்க பலருக்கும் உதவி புரிந்தவர். பல ஆண்டுகளாக இவர் இந்த நாட்டில் இருந்து பல்வேறு ‘ரூபங்களில்’ அயல் நாட்டிற்கு பணமாற்றம் (ஹவாலா) செய்து - அதில் ஒரு விகிதத்தை மட்டுமே கமிஷன் பெற்றுக்கொண்டு - சுவிஸ் வங்கிகளில் இரகசிய கணக்கையும் துவக்க உதவியவர். பணத்தை காப்பாற்றித் தருபவர் பணக் கடவுள் தானே? அவர்தான் ஹசன் அலி கான்.