1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Veeramani
Last Modified: வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (23:48 IST)

சென்னை பந்தாடிய மேக்ஸ்வெல்! பஞ்சாப் அபார வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த இமாலய வெற்றி இலக்கை பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் தவிடு பொடியாக்கி அநாயசமாக வென்று தனது அணிக்கு முதல் வெற்றியை ஈட்டித் தந்தார். 
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஸ்மித்தும், மெக்குல்லமும் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை தந்தனர். 
 
அதனை அப்படியே தொடர்ந்து விரட்டிச் சென்று 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்து இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது சென்னை அணி. 
 
பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும், புஜாராவும் நன்றாகவே துவங்கினர். ஆனால், சேவாக் 19, புஜாரா 13 என ஆட்டமிழந்தனர். 
 
இவர்களைத் தொடர்ந்து இணை சேர்ந்த மேக்ஸ்வெலும், மில்லரும் சென்னை அணியின் பந்து வீச்சை நாசம் செய்தனர். மேக்ஸ்வெல் 43 பந்துகளில் 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 
 
அதன்பிறகு மில்லருடன் இணை சேர்ந்த அணித் தலைவர் பெய்லி அவர் பங்கிற்கு அதிடியாக ஆடி, மொத்தத்தில் 18.5 ஓவர்கரளில் 206 என்ற வெற்றி இலக்கை எட்டி இந்த ஐபிஎல் சீசனில் அதிரடியாக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது பஞ்சாப் அணி.